கோடை மழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு உத்தரவு

கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கோவை நகரில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள பிரதான குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும், மழைக்கு நடுவே சூறாவளிக்காற்று வீசுவதால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைகின்றன. ட்ரான்ஸ்ஃபாமர்கள் வெடித்து சிதறுகின்றன. இதனால், இரவு நேரங்களில் பல மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நகரின் முக்கியமான சாலைகளில் மரங்கள் வேரோடு முறிந்து வாகனங்கள் மீது விழுகின்றன. இதுமட்டுமில்லாமல், முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும், ரயில்வே பாலங்களின் கீழ் பகுதியிலும், மழைநீர் தேங்கிக் கொள்வதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களின் உதவியோடு அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, ஆபத்து காலங்களில் உதவும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தயாராக இருக்குமாறு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...