திருப்பூரில் கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

கணியாம்பூண்டியில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (32) என்பவர் சிவன்மலை என்ற பெயரில் கிளீனிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், அனுபவத்தின் மூலமாக மட்டுமே சிகிச்சை வழங்கி வருவதாக அந்தப் பகுதியினர், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளையில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகிகள் நடத்திய விசாரணையில், ஆனந்த் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை இணை இயக்குநர் மருத்துவர் சுந்தர்ராஜன் தலைமையில் மருத்துவத் துறை அதிகாரிகள் கணியாம்பூண்டியில் ஆனந்த் நடத்தி வந்த கிளீனிக்கை ஆய்வு செய்து சோதனை நடத்தினர். அப்போது, அவருடைய சான்றிதழ்களை சரிபார்த்த போது, அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...