நீலகிரியில் தொடங்கியது கோடை விழா : கோத்தகிரியில் இன்று 10-வது காய்கறி கண்காட்சி

நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.



கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று தொடங்கியது. 



தொடர்ந்து, இரு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சி மற்றும் கோடை விழாவைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். 



கோடை விடுமுறையைக் கழிக்க நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.  



இந்தக் காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 



இதில், மைசூர் கத்திரிக்காயை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மெகா நந்தி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



இதுதவிர, காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ரங்கநாதர் சிலை, மீன் உருவம், பட்டுப்பூச்சி உருவம், அலங்காரக் கோலம் மற்றும் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் விளைந்த மலை காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜான் சலிவன் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசத்து வருகின்றனர். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...