நீட் தேர்வு : கோவையில் மாணவரின் உதவிக்கு சென்ற தாய் மயக்கம் - அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு

கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வுக்காக மாவட்டத்தில் 32 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் வெள்ளூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியும் ஒன்று. இந்த நிலையில், இன்று அந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தாய் ரோகிணி (39) பள்ளி வளாகத்தின் வெளியே இருந்தார். அப்போது, அவர் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேர்வுக்காக மகனை அதிகாலையிலேயே சாப்பிடாமல் அழைத்து வந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 



இந்த நிலையில், தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தேர்வர்களுடன் வந்த பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...