கோவையில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்

கோவை : கோவையில் ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்பட்டுள்ளது.


கோவை : கோவையில் ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சுற்றுலா  சேவை கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் நடத்தப்படும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு ஹெலி கார்னிவெல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  வரும் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற  இந்த விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் முதல் ஹெலிகாப்டர் பயணம் தொடங்கப்பட்டது. 

இது குறித்து கிருஷ்ணகுமார் பேசுகையில், " இந்த நிகழ்ச்சி வரும் 10 முதல் 15ம் தேதி வரை கங்கா நர்சிங் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை  6  மணி வரை நடைபெறும் இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியில் 5 வயது முதல் உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு கோவையைச் சுற்றி பறக்கலாம்.  ஒவ்வொரு பயணமும் 10 நிமிடங்கள் வரை இருக்கும். இந்த 10 நிமிடங்களில் மருதமலை, வெள்ளியங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் மற்றும் ஈஷா யோகா மையம் போன்ற இடங்களைப் பார்க்க முடியும். இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 3,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது." என்றார்  

ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு www.justfly.com என்ற இணையதள முகவரிக்கு சென்றும், 0422-4500 600, 96009-77711 என்ற தொலை பேசி எண்களைத் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...