நீட் தேர்வுக்கு இந்தியில் வினாத்தாள்கள் : தாமதமாக தேர்வெழுதிய தமிழக மாணவர்கள்

மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 மாணவர்களுக்கு இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. இதனால், அந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து, ஆங்கிலம், தமிழ் வினாத்தாள்களுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி 120 மாணவர்களையும் தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள்ளேயே தேர்வு அதிகாரிகள் அமரவைத்திருந்தனர்.

பெற்றோர் உட்பட யாருமே அந்த மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த 120 மாணவர்களுக்கும் அங்கேயே மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மிகவும் தாமதமாக ஆங்கிலம், தமிழ் மொழிகளில் அந்த மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வினாத்தாள் மொழிச் சிக்கலால் காக்க வைக்கப்பட்டிருந்த 120 மாணவர்களும், பிற்பகல் 2.40 மணிக்கு நீட் தேர்வை எழுதினர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...