ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த மூதாட்டி: விபரம் தெரியாமல் வந்ததாக விளக்கம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆலாந்துறை போயர் காலணி பகுதியை சேர்ந்தவர் வீரமணி என்கின்ற வீரம்மாள்(65). இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வந்திருந்தார். வழக்கமாக மனு அளிக்க வருபவர்களிடம் சோதனை நடத்தும் காவலர்கள் மூதாட்டியின் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அவரிடம் அரை லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.



தொடர்ந்து, அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்த போலீசார் விசாரித்தனர். அப்போது, தனக்குச் சொந்தமான வீட்டை தங்கை ஏமாற்றி விட்டதால் மனு அளிக்க வந்திருப்பதாக மூதாட்டி தெரிவித்தார். மேலும், குனியமுத்தூரில் வசிக்கும் தனது மகள் கேட்டு கொண்டதின் காரணமாக, அவரிடம் கொடுக்க மண்ணெண்ணெய் வாங்கி வந்ததாகக் கூறிய மூதாட்டி, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்று தனக்கு விபரம் தெரியாது என பரிதாபமாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் உதவியுடன் மனு அளிக்கச் சென்றவர், மனு அளித்த பின்னர் பாட்டிலை திரும்ப வாங்கிச் சென்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...