புதுப்பொலிவு பெறுமா கூடலூர் ஊசி மலை சுற்றுலாத்தலம்?

நீலகிரி : கூடலூரில் உள்ள ஊசி மலை சுற்றுலாத்தலத்தை அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது.

நீலகிரி : கூடலூரில் உள்ள ஊசி மலை சுற்றுலாத்தலத்தை அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது. 



நீலகிரி மாவட்டம் கூடலூரில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஊசி மலை என்ற இரு பிரதான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில், முதுமலை புலிகள் காப்பகம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இங்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

வளர்ப்பு யானைகள் முகாம், யானை சவாரி, வாகன சவாரி என்று சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சங்கள் முதுமலையில் ஏராளம். இதன் காரணமாக முதுமலை மற்றும் அதையொட்டியுள்ள மசினகுடி போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது.



ஊசி மலை 

கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஊசி மலை. வனத்தை ஒட்டியுள்ள இந்த காட்சி முனையில் இருந்து கூடலூர் பகுதியை பறவையின் பார்வையில் கண்டு ரசிக்கலாம். வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலாத்தலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. 



மலையின் உச்சியில் உள்ள காட்சி முனைக்கு செல்லும் பாதை 'கரணம் தப்பினால் மரணம்' என்பதைப் போல ஆபத்தானது. சற்றும் அசந்தால் பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அந்த பாதையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், தடுப்புகள் தற்போது உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. தடுப்புகள் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலையிலேயே சுற்றுலா பயணிகள் நடமாடுகின்றனர். 



மேலும், காட்சி முனையில் சிலர் அருவருக்கத்தக்க முறையில் கிறுக்கிச் சென்றுள்ளனர். இது அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும், நுழைவு வாயிலில் உள்ள காவலர் அறையை பல முறை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் நடமாட்டம் காரணமாக மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.



"நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஊசி மலையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வனத்துறையினர் விளக்கமளிக்கின்றனர். ஆனால், ஊசி மலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இப்பகுதியை சுற்றுலாத் துறை கண்டு கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய இந்த நிலையில், ஊசி மலையை அரசு நல்ல முறையில் பராமரித்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...