கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் 24 மி.மீ. மழை பதிவு

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பல இடங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. மேலும், 13-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருச்சி மாவட்டம் துவக்குடி மற்றும் மதுரையின் வடக்கு பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.

அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில், மேலூரில் 60 மி.மீ. மழையும், துவக்குடி (இஸ்ரோ)வில் 57 மி.மீ. மழையும், மதுரை (இஸ்ரோ) 42 மி.மீ. மழையும், பாலக்கோடு 40 மி.மீ. மழையும், பெருந்துறை 31 மி.மீ. மழையும், போடி நாயக்கனூர் 26 மி.மீ. மழையும், கோவை (பெரிய நாயக்கன் பாளையம்) மற்றும் விருதுநகரில் தலா 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.



இனி வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள தமிழகம், கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது, இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...