வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் அழகிய கொன்றைப் பூக்கள்

கோவை : வால்பாறையில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூக்களைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.

கோவை : வால்பாறையில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூக்களைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். 

கோடை விடுமுறை காரணமாக, ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறையில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

ஆழியாரிலிருந்து 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து தான் வால்பாறையை சென்றடைய வேண்டும். அந்த கொண்டை ஊசி வளைவுகளில் சாலைகளின் இருபுறமும் மஞ்சள் நிறத்தில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அவ்வாறு, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது இந்த கொன்றைப் பூக்கள். 

வால்பாறையில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நேரத்தில், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி சேர்க்கைக்காக தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டி கட்டாயத்தில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் கோடை விழாவைக் காண முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த வருடம் வால்பாறையில் முன் கூட்டியே கோடை விழா தொடங்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மழை: 



வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முக்கிய சுற்றுலாப் பகுதியான கூழாங்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளித்து மகிழ்கின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...