மூங்கில் வளர்த்து பயன் பெற விவசாயிகளை அழைக்கும் வேளாண் வல்லுனர்கள்..!

மேட்டுப்பாளையம்: மூங்கிலை மரவகை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி விட்டதால் மூங்கில் வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வேளாண் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


மேட்டுப்பாளையம்: மூங்கிலை மரவகை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி விட்டதால் மூங்கில் வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வேளாண் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரம்பரிய கட்டிட கலையில் இயற்கை சார்ந்த கட்டுமான பொருட்களின் பங்கு அதிகமாக இருந்தது. இதில் இரும்புக்கு நிகரான பலம் கொண்ட முக்கியமான பொருட்களில் ஒன்று மூங்கில். அறிவியல் வளர்ச்சி காரணமாக தற்போது கான்கிரீட் கட்டிடங்கள் வந்துவிட்டது. இதனால், மூங்கில் பயன்பாடு குறைந்தது.

இருந்த போதிலும், காகிதம் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளை மூங்கில் மூலம் பெற்று வருகிறோம். இதுவரை மூங்கில், மரவகை பட்டியலில் இருந்தது. இதனால், அவற்றை வளர்த்து விற்பனைக்காக வெட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது. மேலும், தமிழகத்தில் வளர்க்கப்படும் மூங்கிலை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் தடை இருந்தது.

சந்தை வாய்ப்பு

ஆனால், தற்போது மூங்கிலை மரவகை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது. இதனால் மூங்கிலுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இனி இந்தியாவிற்குள் தேவை அதிகமுள்ள எந்த பகுதிக்கும் மூங்கிலை எவ்வித கட்டுப்பாடுமின்றி கொண்டு செல்ல இயலும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூங்கிலுக்கான தேவை அதிகம் உள்ளதால், தமிழக விவசாயிகள் மூங்கில் வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் பெற இயலும் என வேளாண் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண் வல்லுனர்கள், "பிற பயிர்களைப் போல் அதிக பராமரிப்பு மற்றும் நீர் மூங்கில் வளர்ப்புக்குத் தேவையில்லை. ஒரு ஹெக்டேர் நிலத்தில் 400 மரக்கன்றுகள் வரை நடவு செய்ய முடியும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூபாய் இரண்டு லட்சம் வரை விவசாயிகள் வருமானம் பெற முடியும். மூங்கில் வளர்ப்பு முறை மற்றும் அதன் சந்தை வாய்ப்பு குறித்து ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்" என்று தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...