கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை

கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.


கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.



தெற்கு தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 30 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த ஒத்திகையின் போது, தீ விபத்து மற்றும் நிலநடுக்க காலங்களில் எவ்வாறு மீட்புப் பணிகள் நடைபெறுகிறது? என்பதை செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு பேரிடர் தொடர்பான துண்டு பிரசுகரங்களை வழங்கினார். தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை கயிறு, வலை உபகரணங்கள் கொண்டு மீட்பது, திடீர் தீ விபத்து ஏற்படும் போது தீயை கட்டுப்படுத்துவது குறித்து அரசு ஊழியர்களே செய்து காட்டினர்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...