கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு 'யூரோபெல்டிஸ் பூபதி'

கோவை : கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்புவிற்கு 'யூரோபெல்டிஸ் பூபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்புவிற்கு 'யூரோபெல்டிஸ் பூபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் பி.எச்.டி படித்த வி.ஜே. ஜின்ஸ் என்பவர் கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பகுதியில் யூரோபெல்டிஸ் வகை பாம்பினத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பாம்பின் வகைகளில் தனது எழுந்த சந்தேகங்களை ஆராயத் தொடங்கினார். 

இதன்மூலம், உடலமைப்பு, செதில்களைக் கொண்டு பாம்புகளை வகைப்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்தார். இது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

சுமார் 40 செ.மீ. நீளமுள்ள பாம்புகள், அதன் வயிற்றுப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செதில்களை வைத்திருக்கும் என்பதை தெரிந்து கொண்டார். ஆனால், செல்டைல்ஸ் வகை இதற்கு மாறாக இருந்தது. "இந்த வகை உயிரினங்கள் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிற பாம்புகளை ஒப்பிடுகையில், செல்டைல்ஸ் விநோதமானது," என சிம்ப்ளிசிட்டிக்கு அவர் கூறினார். 

மண்புழுக்கள் போன்ற பாம்பினங்கள் மழைக்காலங்களில் அதன் இருப்பிடத்தில் இருந்து வெளியேரும். இந்தியாவில் பெனின்சுலார் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் விஷமில்லா பாம்புகள் காணப்படுகின்றன. நாடு முழுவதும் ஏராளமான பாம்பினங்கள் உள்ளன. அவற்றின் வகை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், அதன் இனத்தை அடையாளம் காண்பதில் பொதுவாக சாதாரண மனிதர்களுக்கு சிக்கல் எழும்.

"சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மைய வளாகத்தில் 10 முதல் 15 பாம்புகள் மழைக் காலங்களில் சுற்றித் திரிகின்றன. அவைகள் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாருக்கும் தொந்தரவு அளிக்காத வகையில் வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலான இடங்களில் பல்வேறு வகையான பாம்பினங்கள் உள்ளன. மனிதர்கள் அதனை காண்பது அரிதான ஒன்றாக இருந்தாலும், அரிய வகை பாம்புகளை அவர்களால் அடையாளம் காண முடியாது. 

ஏனெனில், பாம்பில் ஏராளமான வகைகள் உள்ளன. குறிப்பாக, யுரோபெல்டிஸ் இனங்கள் குறித்த விரிவான தகவல்கள் ஏதும் இல்லை. எனவே, ஒருமுறை அந்த பாம்பினங்களை அடையாளம் கண்டால், அந்த முறையை வைத்தே மீண்டும் அதனை அடையாளம் காண முடியும்," என்றார் ஜின்ஸ்.

தற்போது, ஆனைகட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செல்டைல்ஸ் வகை பாம்பு, இந்தியாவில் இருக்கும் 41-வது பாம்பாகும். இதன் எண்ணிக்கை மற்றும் நடமாட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருப்பதாக வி.ஜே. ஜின்ஸ் தெரிவித்துள்ளார். யூரோபெல்டிஸ் பூபதி' பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் ஜுட்டாக்ஸா மேகஸினில் இடம்பெற்றுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...