கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு 'யூரோபெல்டிஸ் பூபதி'

கோவை : கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்புவிற்கு 'யூரோபெல்டிஸ் பூபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்புவிற்கு 'யூரோபெல்டிஸ் பூபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் பி.எச்.டி படித்த வி.ஜே. ஜின்ஸ் என்பவர் கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பகுதியில் யூரோபெல்டிஸ் வகை பாம்பினத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பாம்பின் வகைகளில் தனது எழுந்த சந்தேகங்களை ஆராயத் தொடங்கினார். 

இதன்மூலம், உடலமைப்பு, செதில்களைக் கொண்டு பாம்புகளை வகைப்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்தார். இது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

சுமார் 40 செ.மீ. நீளமுள்ள பாம்புகள், அதன் வயிற்றுப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செதில்களை வைத்திருக்கும் என்பதை தெரிந்து கொண்டார். ஆனால், செல்டைல்ஸ் வகை இதற்கு மாறாக இருந்தது. "இந்த வகை உயிரினங்கள் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிற பாம்புகளை ஒப்பிடுகையில், செல்டைல்ஸ் விநோதமானது," என சிம்ப்ளிசிட்டிக்கு அவர் கூறினார். 

மண்புழுக்கள் போன்ற பாம்பினங்கள் மழைக்காலங்களில் அதன் இருப்பிடத்தில் இருந்து வெளியேரும். இந்தியாவில் பெனின்சுலார் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் விஷமில்லா பாம்புகள் காணப்படுகின்றன. நாடு முழுவதும் ஏராளமான பாம்பினங்கள் உள்ளன. அவற்றின் வகை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், அதன் இனத்தை அடையாளம் காண்பதில் பொதுவாக சாதாரண மனிதர்களுக்கு சிக்கல் எழும்.

"சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மைய வளாகத்தில் 10 முதல் 15 பாம்புகள் மழைக் காலங்களில் சுற்றித் திரிகின்றன. அவைகள் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாருக்கும் தொந்தரவு அளிக்காத வகையில் வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலான இடங்களில் பல்வேறு வகையான பாம்பினங்கள் உள்ளன. மனிதர்கள் அதனை காண்பது அரிதான ஒன்றாக இருந்தாலும், அரிய வகை பாம்புகளை அவர்களால் அடையாளம் காண முடியாது. 

ஏனெனில், பாம்பில் ஏராளமான வகைகள் உள்ளன. குறிப்பாக, யுரோபெல்டிஸ் இனங்கள் குறித்த விரிவான தகவல்கள் ஏதும் இல்லை. எனவே, ஒருமுறை அந்த பாம்பினங்களை அடையாளம் கண்டால், அந்த முறையை வைத்தே மீண்டும் அதனை அடையாளம் காண முடியும்," என்றார் ஜின்ஸ்.

தற்போது, ஆனைகட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செல்டைல்ஸ் வகை பாம்பு, இந்தியாவில் இருக்கும் 41-வது பாம்பாகும். இதன் எண்ணிக்கை மற்றும் நடமாட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருப்பதாக வி.ஜே. ஜின்ஸ் தெரிவித்துள்ளார். யூரோபெல்டிஸ் பூபதி' பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் ஜுட்டாக்ஸா மேகஸினில் இடம்பெற்றுள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...