உதகையில் தொடங்கியது 16-வது ரோஜா கண்காட்சி : சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிக்கும் படைப்புகள்

நீலகிரி : உதகையில் 16-வது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 16-வது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். 



நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, உதகையில் ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 



இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 30 ஆயிரம் சிவப்பு ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட இந்தியா கேட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



சிவப்பு மற்றும் ஊதா நிற ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட சோட்டா பீம் உருவம் கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ளது.



கிருஷ்ணகிரி தோட்டக்கலை துறை சார்பில் 5,000 சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள படகு, மதுரை தோட்டக்கலைத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காளை, ஈரோடு தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயில் போன்றவை இந்த ரோஜா கண்காட்சிக்கு மெருகூட்டும் வகையில் உள்ளது. 



நாளை வரை நடக்கும் இந்த ரோஜா கண்காட்சியைக் காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...