மழை நீரில் சிக்கிய முதியவரை மீட்டு மறுவாழ்வு அளித்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய ஆதரவற்ற முதியவரை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.

கோவை: கோவையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய ஆதரவற்ற முதியவரை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.



மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வான மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், கோவை மத்திய ரயில்நிலையம் லங்கா கார்னர் பாலத்தின் அடியில் குளம் போல நீர் தேங்கிக் கிடந்தது. அதில், ஒரு வயதான ஆதரவற்ற நடக்க முடியாத முதியவர் அமர்ந்திருந்தார். பெருமளவு தண்ணீர் சூழ்ந்ததால், தண்ணீருக்குள் மாட்டிக் கொண்ட முதியவரால் வெளியே வர முடியவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஏராளமானோர் வேடிக்கை மட்டுமே பார்த்துச் சென்றனர்.



இந்த நிலையில், தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை, ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர், முதியவர் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த முதியவருக்குத் தேவையான முதலுதவிகள் அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறார். ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் இந்த செயலை, ஏராளமான பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.



Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...