கோடை சுற்றுலா: குன்னூர் சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள்

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எங்கே செல்லலாம்? என்ன பார்க்கலாம்? என்று சிம்ப்ளிசிட்டி வாராந்திர கட்டுரை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் குன்னூர் பகுதியிலுள்ள சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள் பற்றி காணலாம்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எங்கே செல்லலாம்? என்ன பார்க்கலாம்? என்று சிம்ப்ளிசிட்டி வாராந்திர கட்டுரை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் குன்னூர் பகுதியிலுள்ள சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள் பற்றி காணலாம்.

சிம்ஸ் பூங்கா

உதகைக்கு அடுத்தபடியாக குன்னூரில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக சிம்ஸ் பூங்கா விளங்கி வருகிறது. குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. கடந்த 1874-ம் ஆண்டு அப்போதைய சி.எஸ்.ஐ. செயலாளர் ஜே.டி.சிம் மற்றும் அப்போதைய வனத்துறை சூப்பிரண்டு மேஜர் முர்ரே ஆகியோர் சிம்ஸ் பூங்கா-வை தொடங்கி வைத்தனர்.



அமைப்பு

சிம்ஸ் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 12.14 ஹெட்டேர் ஆகும். 10.94 ஹெக்டேர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா கடல் மட்டத்திலிருந்து 1,768 மீட்டர் முதல் 1,798 மீட்டர் வரை உயரத்தில் உள்ளது. பூங்காவில் ருத்திராட்ச, காகிதம், கற்பூரம், யானைக் கால் மற்றும் அரக்கோரியா உள்ளிட்ட 10 வகையான மரங்கள் காணப்படுகின்றது. இதில் நூற்றாண்டைக் கடந்த மரங்களும் அடங்கும்.



இந்த பூங்காவிற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா வரும் குழந்தைகளை கவரும் வகையில் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுக்கள் உள்ளன. மேலும், படகு சவாரி செய்ய இங்குள்ள ஏரியில் படகு சவாரியும் விடப்படுகிறது.



கட்டண விபரம்

பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணமாக பெரியவர்க்கு ரூ.30, சிறியவர்க்கு ரூ.15, காமிராவுக்கு ரூ.50 மற்றும் வீடியோ காமிராவுக்கு ரூ.100-ம் வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி செய்ய நபர் ஒருவருக்கு ரூ. 25 வசூலிக்கப்படுகிறது. 

சிம்ஸ் பூங்காவிற்கு செல்ல குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து மினி பேருந்துகளும், அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.



மேலும், குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் இந்த பூங்கா அமைந்துள்ளதால் கோத்தகிரி செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். ஆண்டு தோறும் இங்கு பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் 60-வது பழக் கண்காட்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...