மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கி தேயிலை தொழிலாளி பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடரி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடரி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.

குந்தா தாலுகா மஞ்சூர் அருகே கோடரி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஆலடா வேலி எனும் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் ராமலிங்கம் (60) என்பவர் இன்று காலை 8 மணியளவில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.



அப்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை ராமலிங்கத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராமலிங்கத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...