கோவையில் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் உள்ள பாடகிரி மலைப் பகுதியில் இருந்து கோவை வழியாக ஜீப்பில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், பீளமேடு போலீசார் சின்னியம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த சந்தேகத்திற்கு இடமான ஜீப்பை போலீசார் சோதனையிட்டனர்.



அப்போது அதில், மூட்டை மூட்டையாய் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர், ஜீப்பில் வந்த இருவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும் வனராஜ் (45) மற்றும் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் அவர்கள் இருவரையும் கைது போலீசார் ஜீப் மற்றும் அதில் இருந்த 250 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...