வேளாண் பல்கலை.,யில் மாணவர் சேர்க்கைக்கு முதன் முறையாக இணையதள வழி கலந்தாய்வு

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் முறையாக இணையதள வழியாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் முறையாக இணையதள வழியாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி கூறியதாவது :- 

மே மாதம் 18-ம் தேதி முதல் இளமறிவியல் பட்டப்படிப்பு விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக பதிவேற்றும் முறை தொடங்குகிறது. ஜூன் மாதம் 17-ம் தேதி முடிவடைகிறது. அதன் பின் ஜூன் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 22-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 7-ம் தேதி சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.



முதல் முறையாக இணையதள வழியாக ஜூலை 9 முதல் 13 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. பின்னர், 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16 அன்றும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதே மாதம் 1-ம் தேதி கல்லூரி தொடங்கும். 

கலந்தாய்வு 

இணையதள வழியாக நடைபெறும் கலந்தாய்வில் சிலைடிங் (Sliding) முறை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில், இடங்கள் இருந்தால் தங்கள் விருப்பத்தின் படி மாற்றிக்கொள்ளலாம். தனியார் கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்கள் பல்கலைக்கழகம் மூலமாக நிரப்பப்படும். 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளிலேயே நிரப்பப்படும். இதில் முறைகேடுகள் ஏற்பட்டால் அந்தந்த கல்லூரி நிர்வாகமே பொறுப்பு. இளையதள வழியாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் யாரும் கோவைக்கு வரவேண்டியதில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் வகையில் வரும் 21-ம் தேதி திறந்த வெளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...