குட்கா வழக்கை திசை திருப்புகின்றனர் : நீதிமன்றத்தில் ஆஜரான எம்.எல்.ஏ., நா.கார்த்திக் பேட்டி

கோவை : குட்கா ஆலை வழக்கில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கோவை : குட்கா ஆலை வழக்கில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அந்த ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் உட்பட 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில், நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மற்றும் தங்கராஜ் ஆகியோர் கோவை மாவட்ட விடுமுறை கால நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்தனர். முன்ஜாமீனை அடுத்து சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன் மறு உத்திரவு வரும் வரை இருவரையும் சூலூர் காவல் நிலையத்தில் தினமும், கையெழுத்து இட உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கண்ணம்பாளையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா ஆலை விவகாரத்தில், நியாயமான முறையில் போராடிய தி.மு.க.,வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளனர். 

இதுதொடர்பாக, என் மீதும், பொய் வழக்கு போடப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளேன். இதில், தி.மு.க.,விற்கு எந்தத் தொடர்பும் இல்லை. குட்கா தொழிற்சாலையில் சோதனை நடப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றேன். தி.மு.க.,வினர் அற வழியில் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தி.மு.க., ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், கடந்த 27-ம் தேதி, குட்கா வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது. ஆனால், இது வரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தி வருகிறோம். 

வழக்கை திசை திருப்பும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய் வழக்கு, இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை." என்றார். 

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...