கோவையில் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோவை : வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

கோவை : வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 



தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் திறன் பயிற்சி மூலம் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கல்வி திறனுக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவரவர் பயிற்சி பெற்ற துறைக்கேற்ப வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர். 



இந்த நிலையில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் விளம்பர ஊர்தியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இந்த விளம்பர ஊர்தி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திறன் பயிற்சி குறித்த காணொளி மூலம் விளக்கப்படும். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது :- தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம், மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. திறன் பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் 0422-2642388 அல்லது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0422-2642041 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும், என்றார். 

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...