உணவக மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு : இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம்

திருப்பூர் : அவினாசியில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : அவினாசியில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சியாம் என்பவர் "அமிர்தம் உணவகம்" நடத்தி வந்தார். இந்த உணவகம் மழையினால் சுவர் ஈரமாகி வலுவிழந்து இருந்து வந்தது. 

இந்த நிலையில், இந்த ஹோட்டல் பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், நியூ திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 

இந்த விபத்தில் வடமாநில பெண் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய ரம்யாவை பொதுமக்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 



இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா, திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ரம்யாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை தரும் வரை உடலை வாங்க மாட்டோம் என மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...