கர்நாடகாவில் ஆட்சியமைப்பதில் குழப்பம்: காங்கிரசுடன் கைகோர்த்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கு இடையே கூட்டணிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கு இடையே கூட்டணிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பா.ஜ.க., பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 104 இடங்களில் பா.ஜ.க., முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 70-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பா.ஜ.க., தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.,வின் வெற்றி உறுதியானது. இந்த நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க., ஆட்சியமைப்பதை தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் இடையே கூட்டணி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஆட்சியமைக்கப்போவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தேவகவுடாவும் சந்தித்து பேசுகின்றனர். இது கர்நாடக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு, ஆட்சியமைப்பதற்கு தேவையான 112 இடங்களை பா.ஜ.க., பெறவில்லை எனில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா கட்சியும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...