பறை இசை பயிற்சி பட்டறையில் இசைக்கேற்ப நடனமாடி அசத்திய மாணவர்கள்

கோவை: கோவையில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இசைக்கேற்ப நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

கோவை: கோவையில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இசைக்கேற்ப நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.



சி.எஸ்.ஐ கோவை மண்டல தொடர்பியல் துறை சார்பில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்புகள் அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ எஸ்.டி.சி அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் பயிற்சி பட்டறையில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.



இது குறித்து தொடர்பியல் துறை இயக்குனர் அருட்தந்தை கிருஸ்டோபர் கூறுகையில், "பறை இசை குறித்து தவறான கண்ணோட்டம் நிலவி வருகிறது. இது கிராமிய கலைகளில் ஒன்றானது. இந்த கலையை வளர்க்கும் நோக்கில் இந்தப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. அழிந்து வரும் இந்தக் கலையை மீட்டெடுக்கும் முயற்சிதான் இது. தொடர்பியல் துறை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தலித் கலை விழா, கீர்த்தனை பெரு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வரும் எழுத்தாளர் திருச்சி பிரபாகரன் மற்றும் விடியல் அமைப்பு சமூக ஆர்வலர் பிரபாகர் கூறியதாவது :- இந்த இசை பயிற்சியில் மாணவர்களுக்கு மனரீதியாகத் தயாராகுதல், இசைக்கேற்ப உடல்மொழி கற்றுத் தரப்படுகிறது. மறைந்து வரும் கலையை திரும்பக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, என்றார்.



இந்தப் பட்டறையில் பங்கேற்றுள்ள கல்லூரி மாணவியான செபெல்லா எஸ்தர் கூறும்போது :- வடகத்திய கலாச்சாரம் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய கலையை கற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வு, மனப்பான்மையை போக்கவும், இதை மக்களிடையே எடுத்து செல்ல இந்தப் பறை பயிற்சி அமைந்துள்ளது, எனக் கூறினார்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...