கோவை மத்திய சிறையில் காவலர்கள் துன்புறுத்துவதாக கைதி ரகளை

கோவை: சிறைக் காவலர்களால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறை கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றியபடி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: சிறைக் காவலர்களால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறை கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றியபடி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் ராஜா (26). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதுள்ள அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிக்காக ஆஜர்படுத்தபட்ட சஞ்சய்ராஜா, ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிறை காவலர்கள் தன்னை சிறையில் துன்புறுத்துவதாக புகார் மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதி சஞ்சய்ராஜா-வை வெளியில் அழைத்து வந்த போது அவர் சட்டையை கழற்றிவிட்டு ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது, "கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துகிறார். மேலும், சிறையில் என்னைத் தாக்கியதால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனக்கு மருத்துவ வசதி செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்." என்றார்.

ரகளையில் ஈடுபட்ட கைதி சஞ்சய்ராஜா-வை காவல்துறையினர் இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவருக்குப் பின்னால் வேறு வழக்குகளுக்கு வந்த சிறை கைதிகளும் சிறையில் துன்புறுத்தல் நடப்பது உண்மை தான் என்று சத்தம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் கூறி முழக்கம் எழுப்பிச் சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...