வீட்டுமனை வழங்க வலியுறுத்தி காந்திபார்க் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாநகராட்சி 21-வது வார்டில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு இடம் வழங்கக்கோரி குமாரசாமி நகர் பொதுமக்கள் காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மாநகராட்சி 21-வது வார்டில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு இடம் வழங்கக்கோரி குமாரசாமி நகர் பொதுமக்கள் காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சி 21-வது வார்டில் இருக்கும் குமாரசாமி நகர் மற்றும் முத்தனன் குளம் அருகே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மக்களை குமாரசாமி நகரில் இருந்து வேறு இடத்திற்கு அகற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வேண்டாம். வீடு கட்ட இடமாக அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி காந்திபார்க் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



போராட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன் என்பவர் கூறியதாவது:- மாநகராட்சி நிறையத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்த இடத்தை கூட, பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை. மேலும், சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனே வீட்டுமனைப் பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும், எனக் கூறினார்.



Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...