கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் 222 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க., 104 இடங்களை வென்றது. அங்கு ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் 116 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் ம.ஜ.த., தலைவர் குமாரசாமி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் பெரும்பான்மை இல்லாத போதும் தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் மனு அளிக்கப்பட்டது. 



இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில் அவருடன் வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...