குப்பைகளால் நிரம்பி வழியுது நொய்யல்

கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது.

கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது. 



கோவையில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் நொய்யல் ஆற்றுப் படுகை பாழ்பட்டு வருகிறது. தெருநாய்களின் வாழ்விடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவருகிறது வற்றிப்போன நொய்யல் ஆற்றங்கரை. 



காருண்யா நகர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் வற்றாமல் பயணித்த நோய்யலின் கதி இது என்று நொந்து கொள்கின்றனர் ஆர்வலர்கள். 



இது குறித்து நொய்யல் பாதுகாப்பு குழு மற்றும் சிறுவாணி விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறுகையில், "ஆற்றுப் படுகையில் இருந்த மரங்களை அகற்றுவதும் இந்த வறட்சிக்குக் காரணமாக உள்ளது. நொய்யல் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. இது வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகள் கொட்டப்படுவதோடு, நொய்யலில் கழிவு நீரும் கலக்கப்படுகிறது. இது வேதனையான ஒன்றாகும்." என்றார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...