கோவையில் போலீஸ் மியூசியமாக மாறிய ஹாமில்டன் கிளப்

கோவை: ஹாமில்டன் போலீஸ் கிளப்பானது கோவை இரயில் நிலையம் எதிரே எஃப்.ஏ. ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல் துறை அதிகாரியால் கடந்த 1918-ம் ஆண்டு 3,488 சதுர அடியில் உருவாக்கப்பட்டது. கடந்த 1951-ம் ஆண்டு இந்த கிளப்பில் 16 அறைகள், நூலகம், சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் முறையான கவனிப்பின்றி பாழடைந்தது ஹாமில்டன் கிளப்.

கோவை: ஹாமில்டன் போலீஸ் கிளப்பானது கோவை இரயில் நிலையம் எதிரே எஃப்.ஏ. ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல் துறை அதிகாரியால் கடந்த 1918-ம் ஆண்டு 3,488 சதுர அடியில் உருவாக்கப்பட்டது. கடந்த 1951-ம் ஆண்டு இந்த கிளப்பில் 16 அறைகள், நூலகம், சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் முறையான கவனிப்பின்றி பாழடைந்தது ஹாமில்டன் கிளப்.

அருங்காட்சியகம்

நீண்ட நெடுங்காலமாக பயன்பாடற்று கிடந்த இந்த கிளப்பை தமிழ்நாடு காவல் துறையினர் கடந்த 2016-ல் மறு சீரமைத்தனர்.

இந்த அருங்காட்சியகத்தில் காவல் துறையால் பயன்படுத்தப்பட்டு வந்த ஆயுதங்கள், சீருடைகள், மலையூர் மம்பட்டியான், வீரப்பன் ஆகியோர் பயன்படுத்திய துப்பாக்கிகள், விடுதலை புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பல்கள், இராணுவ வீரர்கள் பயன்படுத்திய உடைகள், வெடிகுண்டு கண்டுபிடிப்பு கருவிகள், உள்ளிட்ட பல அரிய மற்றும் சிறப்புக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருந்தது.



இன்றைய கால இளைஞர்கள் தமிழ்நாடு காவல் துறையை பற்றி தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் உதவுகிறது.



தற்போது புனரமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டி.ஜி.பி., ராஜேந்திரன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐஜி.பாரி, கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ரயில் நிலையம் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க., தொண்டர்களும் அங்கு திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...