கோவையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அரிய வாய்ப்பு: டி.என்.சி.ஏ., பயிற்சி முகாம் தொடக்கம்

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை பயிற்சி முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை பயிற்சி முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

பி.எஸ்.ஜி., ஐஎம்எஸ்ஆர் மைதானங்களில் 9-வது ஆண்டு கோடை பயிற்சி முகாம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இன்று முதல் மே 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த இளம்வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் சான்றிதழ் பெற்ற சிறந்த பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்தப் பயிற்சிக்காக மாவட்ட அளவில் இருக்கும் அகடாமியில் இருந்து, ஒவ்வொரு பிரிவிலும் 45 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வாளர் ஆர். வெங்கடேஷ் கூறுகையில், "வீரர்கள் பல்வேறு அகாடமிகளில் பயிற்சி பெற்று வரும் நிலையில், இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற முகாம்கள் அவர்களது வாழ்க்கையில் முக்கியமானதாகும். இது போன்ற முகாம்களில் ஆட்ட நுணுக்கங்களை அனுபவ வீரர்களிடம் இருந்து பெற்று, இளம் வீரர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்," என்றார்.



இந்தப் பயிற்சி முகாமில் இந்திய அணிக்காகவும், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி வரும் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் விஜய்சங்கர் ஆகியோர் இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...