உதகையில் தொடங்கியது மலர் கண்காட்சி : பூத்துக் குலுங்கும் மலர்களை கான பொதுமக்கள் ஆர்வம்..!

நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.



ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த 122-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 



வகைகள் 

இந்த மலர் கண்காட்சியில் இன்கா மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, ஆசியாடிக் லில்லி பம், பிளாக்ஸ், சால்வியா, பால்ஸம், உள்பட 18 மலர் வகைகள், 50 ஆயிரத்திற்கு மேலான பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் ஜீவ நாடியாகத் திகழும் பழமை வாய்ந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் சிவப்பு வெள்ளை கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி, பூங்காவிற்கு வரும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. 



பூங்காவிற்கு வரும் சிறுவர்களை ஈர்க்கின்ற வகையில் பார்பி டால் என்றிழைக்கப்படும் பொம்மை 1500 ஆர்கிட் மற்றும் 1000 கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 



மேலும், கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் 'செல்பி' எடுத்துக்கொள்ள ஏதுவாக 'செல்பி-ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது மலர் கண்காட்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...