பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி திட்டங்கள் ரத்து

கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வந்த தொலைதூர கல்வி திட்டங்களை ரத்து செய்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை :  கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வந்த தொலைதூர கல்வி திட்டங்களை ரத்து செய்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் தொலைக்தூர கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் அடிப்படை வசதிகள், முறையான பாட திட்டங்கள் போன்றவை சரியாக நடைபெறவில்லை என கூறி இந்த மையங்களை மூட வேண்டும் என சுய நிதி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆட்சிமன்ற கூடத்தில் தொலைதூரக் கல்வி மையங்களில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்துவதில்லை, சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்களின் ஓய்வு பெறும் வயது ஏற்கனவே முடிவு செய்தபடி தொடரும் என முடிவெடுக்கப்பட்டது.  மேலும், இந்த மையங்களை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுகட்ட தனியார் கல்லூரி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம் தொலைதூரக் கல்வி மையங்களில் படித்து வரும் மாணவர்கள் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படிப்புகளை தொடரலாம் என்றும் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...