வீட்டு வேலைக்காரப் பெண்ணை கொலை செய்த வழக்கில் அமைச்சர் உறவினரின் ஓட்டுநர் கைது

கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சந்தேகத்திற்கு இடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.


கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சந்தேகத்திற்கு இடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் 36 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு அதில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த பெண் 3 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டதும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. மேலும், காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜெயந்தி என்ற பெண் காணமல் போனதும், தற்போது இறந்து கிடந்தது அவர் தான் என்பதும் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக, விசாரணை நடத்திய போது, இராமநாதபுரம் ஜோதி நகரைச் சேர்ந்த மணிவேல் என்பவர் பிடிபட்டார். இவர் சுகாதார துறை அமைச்சரின், உறவினர் வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வீட்டு உரிமையாளர்கள் வெளியூர் சென்ற நிலையில், வீட்டுத் தூய்மை பணிக்காக வந்த ஜெயந்தியை கொன்ற மணிவேல், அவரை சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடைக்குள் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில், கொலைக்கான காரணம் கற்பழிப்பா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...