உதகை - கூடலூர் சாலையில் பேருந்து விபத்து: 18 பேர் படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உதகையில் உள்ள தனியார் கோவில் திருவிழாவிற்கு கடந்த 18-ம் தேதி ஆந்திரா, மகாராஷ்டிரா, அரியானா மாநிலத்திலிருந்து விழாவில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இன்று திருவிழா முடிந்த நிலையில், பேருந்து மூலம் அவர்களது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 9வது மைல் பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்த நிலையில், சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 2 பேரின் நிலை கவலைக்கிடம் என்பதால், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோடை சீசன் சமயத்தில் இந்த விபத்து நடைபெற்றதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...