கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் : நீலகிரியில் உச்சகட்ட அலர்ட்..!

நீலகிரி : உயிர்க் கொல்லியான நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், மாநில எல்லை மாவட்டமான நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி : உயிர்க் கொல்லியான நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், மாநில எல்லை மாவட்டமான நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை செவிலியர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனிடையே, இறப்புகளைத் தடுப்பதற்கும், நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாக கேரள சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜிவ் சதாநந்தன் கூறியிருந்தார். இதனிடையே, தன்னலமற்ற சேவையை ஆற்றிய போது, நிபா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த செவிலியர் லினியின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். 



கேரளாவில் அச்சுறுத்தி வரும் இந்த நிபா வைரஸ், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு, முழு சோதனைக்குட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகிறது. 



நீலகிரி மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக, கேரள எல்லையோர பகுதியான நாடுகானி, நம்பியார்குன்னு, சோலாடி, தாளூர், பாட்டவயல் மற்றும் கக்குன்டி ஆகிய சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் 24 மணிநேரமும் பணியாற்றும் வகையில் தலா 2 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், கேரளாவில் இருந்து வருபவர்களிடம் நோய் அறிகுறி கண்டறிந்து, அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், இந்த நோய்க்கான அறிகுறியாகக் காணப்படும் தலைவலி, காய்ச்சல், இருமல், உடல்சோர்வு போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநில எல்லையோரப் பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...