நீர்நிலைகளும், நிலத்தடிநீரும் மாசுபடுத்தப்படுவதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மாசுபடுத்தப்படுதை தடுக்கக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மாசுபடுத்தப்படுவதை தடுக்கக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் நொய்யல், அம்பராம்பாளையம் உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதால், அதனை குடிநீருக்காக பயன்படுத்தும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீர், நிலம், காற்று உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை மீட்கக் கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் நீரை பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கழிவுகள் மற்றும் மாசுகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வியாதிகளில் இருந்து மக்களை காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



திருப்பூர்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அக்கட்சியினர் மனு அளிக்கச் சென்றனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் மனுவின் சாராம்சம் குறித்து கேட்காமல் உதாசீனப்படுத்தும் வகையில் மனுவை வாங்கிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...