ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சிசூடு: தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.


தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்களின் போராட்டம் நேற்றுடன் 100-வது நாளை எட்டியது. எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட முயன்றனர். அப்போது, இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது கலவரமாக மாறியது. போலீசார் மீதும், வாகனங்களை அடித்து நொறுக்கினர். உச்சகட்டமாக ஏராளமான வாகனங்களுக்கு தீயை வைத்தனர். இதனால், அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

இதனால், போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானர்கள். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பையும், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தாமல் தவிர்த்திருக்க முடியுமா என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து அறிக்கை அளிக்கமாறு கூறியுள்ளது. இதையடுத்து காவல்துறையிடம் உரிய விளக்கம் பெறப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் டிஜிபி.,க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...