அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் 27-ல் தொடக்கம்

கோவை: அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் வரும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை: அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் வரும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ., பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகள் வரும் 26-ம் தேதி தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்த இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

இந்த போட்டிகளில் பஞ்சாப் போலீஸ், புதுடில்லி-இந்திய விமானப்படை, சென்னை- வருமான வரி அணி, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், டெல்லி இந்தியன் ரயில்வே அணி, பெங்களூரு ஏ.சி.எஸ், புது டெல்லி வருமான வரி அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி போன்ற இந்தியாவின் தலைசிறந்த 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

பெண்கள் பிரிவில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே, திருவனந்தபுரம் கேரள போலீஸ், ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், மைசூர் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், திருவனந்தபுரம் கேரள மின்வாரியம், தமிழ்நாடு ஜூனியர்ஸ் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி பங்கேற்கவுள்ளன.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 50,000 மற்றும் டாக்டர் மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறத்தவறிய இரு அணிகளுக்கு ரூ. 15,000-மும். நன் நடத்தைக்கு தேர்வு செய்யப்படும் அணிக்கு ரேணுகா ராமநாதன் நினைவு விருதும் வழங்கப்படுகிறது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 50,000 மற்றும் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சுழற்கோப்பையும்,  இரண்டாம் பரிசாக ரூ. 25,000 மற்றும் சுழற்கோப்பையும், அரையிறுதி போட்டியில் வெற்றி பெற தவறிய இரு அணிகளுக்கு தலா பத்தாயிரம் மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்படுகிறது.

இப்போட்டிகள் வரும் 26-ம் தேதி தொடங்கி, வரும் 31-ம் தேதி வரை வ.உ.சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. 31-ம் தேதி மாலை நடைபெறும் இறுதிப் போட்டிக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கிறார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...