உதகையில் கோடை விழா ஓவியக் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி: கோடை விழாவை முன்னிட்டு உதகையில் இன்று ஓவியக் கண்காட்சி தொடங்கப்பட்டது.

நீலகிரி: கோடை விழாவை முன்னிட்டு உதகையில் இன்று ஓவியக் கண்காட்சி தொடங்கப்பட்டது. 



தொன்மை வாய்ந்த பழங்குடியினர் கலைகளை பேணி காப்பதோடு, ஓவியக் கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கோடை விழா ஓவியக் கண்காட்சியின் தொடக்க விழா இன்று உதகையில் நடைபெற்றது. இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலர் கண்ணன் தொடங்கி வைத்தார். 



இந்த கண்காட்சியில் பழமை வாய்ந்த தஞ்சாவூர் ஓவியங்கள், அண்மை கால ஓவியங்கள், பல்வேறு கடவுள்களின் திருவுருவங்கள், தலைவர்களின் ஓவியங்கள், இயற்கையை சித்தரிக்கும் ஓவியங்கள் உட்பட பல தரப்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தர் இன பழங்குடி மக்கள் மண் பாண்டம் செய்வது, தோடர் இன. பழங்குடி மக்களின் பூத்து குளி போர்வைகள் உட்பட பல தரப் பட்ட அரிய படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. 



கோடை விழாவையொட்டி உதகை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக 4-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக இதன் அமைப்பாளர் முரளி கண்ணன் கூறினார். 



Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...