குடிநீர் குழாயில் உடைப்பு: தடாகம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கோவை: தடாகம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கோவை: தடாகம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்.எஸ்.புரத்தை அடுத்துள்ள தடாகம் பிரதான சாலையில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் இன்று காலை திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால், அதிக அளவில் குடிநீர் வெளியேறி சாலையை ஆக்கிரமித்தது. சாலையின் இருபுறமும் தண்ணீர் குட்டை போல் தேங்கியதால் குறுகிய இடத்தில் பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.



இதனால் தடாகம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் மேட்டுப்பாளையம் சாலையை நோக்கி திரும்பின. இதனால் மேட்டுப்பாளையம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. பின்னர் தடாகம் சாலைக்கு வந்த காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

இதனை தொடர்ந்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...