'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலில் 'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் 'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான 'மேகுனு' புயல் மிக தீவிர புயலாக மாறியுள்ளது. இது, மத்திய அரபி கடல் பகுதியில் இருந்து, தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் வரும் நாளை மறுநாள் (மே 26) ஓமன் மற்றும் ஏமன் நாடுகளுக்கு இடையில் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசுகிறது. இன்று மணிக்கு 160 முதல் 170 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மற்றும் லட்சத்தீவு, அந்தமான், நிகோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, தமிழக மீனவர்கள் 26-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்குள், மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய கடற்பகுதியில் நேற்று துவங்குவதாக இருந்த தென் மேற்கு பருவமழை, புயல் காரணமாக தாமதமாகியுள்ளது. நேற்று முதல், பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் தெரிவதால், இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவரை, சில இடங்களில் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...