கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. முதலில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பா.ஜ.க.,வின் எடியூரப்பா, பெரும்பான்மை பலம் இல்லாததால், பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, முதலமைச்சராக குமாரசாமி நேற்று முன்தினம் பதவியேற்றார்.

ஆட்சி அமைக்க 111 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 117 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதால் எதிர்பார்த்தப்படியே நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி எளிதில் வெற்றி பெற்றார். வாக்கெடுப்பின்போது பா.ஜ.க., வெளிநடப்பு செய்ததால் குரல் வாக்கெடுப்பின்போது எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை.

தற்போது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 221. காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக உயரும். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை. மூன்று தொகுதிகளிலும், பா.ஜ.க., வெற்றி பெற்றாலும் அந்த கட்சியின் பலம் 107 ஆக மட்டுமே உயரும். எனவே, குமாரசாமியின் கூட்டணி ஆட்சி நீடிப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...