'காவல்நிலையம் தோறும் நூலகம்' திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' என்ற திட்டத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.


கோவை : கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' என்ற திட்டத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 

பல்வேறு தேவைகளுக்காக காவல்நிலையத்தை அணுகுகின்ற மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குபடுத்துவதுடன், அவர்கள் காத்திருக்கும் நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கம். கோவையில் இயங்கி வருகின்ற 36 ரோட்டரி சுழற்சங்கள் தங்கள் பகுதியில் அமைத்துள்ள 38 காவல்நிலையங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திப் பராமரிக்க உள்ளனர். 



இந்த நிலையில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடக்கி வைத்தார். மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் சக்தி மின்கலனையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 

பின்னர் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி.அ. பாரி கூறியதாவது :- ஒவ்வொரு காவல்நிலையத்திலும் நூலகங்கள் அமைத்தால், காவல்நிலையங்களே தேவைப்படாமல் போய்விடும். புத்தகங்கள் வரலாற்றின் அடையாளம். தமிழகத்திலேயே காவல்நிலையத்தில் நூலகம் என்ற பெருமை கோவைக்கு உண்டு. பல்வேறு பிரச்சனைகளில் வருபவர்கள் மற்றும் குற்றவாளிகள் புத்தகங்களைப் படிக்கும் போது, அவர்களது வாழ்க்கையில் மாற்றம் கிடைக்கும்." எனக் கூறினார். மேலும், இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என அவர் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "காவல்துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தை பரவும் போது சமூக விரோதங்கள் குறையும். முதலமைச்சர் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்த முயல்வேன். காவல்நிலையம் வரும் பொதுமக்களை புத்தகங்கள் படிக்க போலீசார் ஊக்கப்படுத்த வேண்டும்," என்றார். 

இந்த விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், கோவை மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் மூர்த்தி, கவிஞர். கவிதாசன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...