உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 'தேயிலை சுற்றுலா விழா' தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட தேயிலைக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கியது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட தேயிலைக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கியது.

தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கர்நாடகா மாநில கலைக் குழுவினரின், தொள்ளு குனிதா நடனத்துடன் இரண்டு நாள் நடக்கும் தேயிலை சுற்றுலா விழா தொடங்கியது. இதனை தொழில் வணிகத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரகுமார் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜீணன் தொடங்கி வைத்தார்.



1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவையொட்டி இடம் பெற்றுள்ள கண்காட்சியில், பிளாக் டீ, ஒயிட் டீ, சில்வர் டிப்ஸ், ஆர்கானிக் டீ என பலதரப்பட்ட தேயிலை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.



இருதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய் என பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாகக் கருதப்படும் தேயிலைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்படும் தேயிலைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.



இதில், தேயிலை வாரியம், இன்கோ சர்வ் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகப்படியான பசுந்தேயிலை வழங்கிய விவசாயிகள் மற்றும் அதிக தேயிலை தூளை விற்பனை செய்த தொழிற்சாலைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்தத் தேயிலை சுற்றுலா விழாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...