மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதால் போலீசார் உள்பட 20 பேர் பாதிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இன்று திங்கட்கிழமை என்பதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்து, அதில் இருந்த தேனீக்கள் அங்கிருந்த பொதுமக்களை தாக்கத் தொடங்கியது. இதனால், குறைதீர்ப்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மட்டுமல்லாது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில், போலீசார் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியது. 

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறையினரின் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டதோடு, பொதுமக்களை சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளேயே பத்திரமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். 

கடந்த ஒரு வாரமாக தேன்கூடு பெரிய அளவில் இருந்த நிலையில், அதனை அப்புறப்படுத்தாமல் அலட்சியப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்று பொதுமக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்கள் இந்த தேனீக்கள் தாக்குதலால் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். 

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...