நீலகிரியில் தோடர் இன மக்களின் கோயில்களை புதுப்பிக்கும் விழா

நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட சுமார் 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.


நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட சுமார் 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 



இவர்களில் மண்ணின் மைந்தர்களாகக் கருதப்படும் தோடர் இன மக்கள் வனம் சார்ந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர். முந்தைய கால கட்டத்தில் மந்து என்று கூறப்படும் இவர்களின் வாழ்விடங்கள் சுமார் 165-ஆக இருந்தன. ஆனால், தற்போது அவை குறைந்து 65 மந்துகளில் மட்டுமே இவர்கள் வாழ்கின்றனர்.



ஒவ்வொரு மந்துகளிலும் இவர்களின் வழிப்பாட்டிற்கு அரை வட்ட வடிவிலான ஆபுல் எனப்படும் கோரை புற்களாலும், மூங்கில் ஓடை குச்சிகளாலும் கொண்டு இந்த கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோவில்கள் 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். இதற்கான இத்தகைய புதுப்பிக்கப்படும் நிகழ்ச்சி உதகையை அடுத்த் பகல் கோடு மந்தில் நடைபெற்றது.

இதற்கான ஆபுல் மற்றும் மூங்கில் ஓடை குச்சிகளை நெடுந்தொலைவில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்காவில் இருந்து சேகரித்தும் முதுமலை வனப் பகுதியில் இருந்து மூங்கில்கள் இவற்றைக் கொண்டு கோவில்கள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தோடர் இன ஆண்கள் மட்டுமே கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு முடித்தனர்.



பின்னர் கோவிலுக்குள் பால், தயிர், வெண்ணெய் எடுத்தும் மூங்கில் மத்து, நெய் விளக்கு போன்றவற்றை தோடர் இன பூசாரிகள் பூஜைக்காக கோவிலில் வைத்தனர். இங்கு வேறு சிலைகளோ அல்லது மலர் மாலைகளோ கிடையாது. அனைத்து மந்துகளில் இருந்தும் வந்திருந்த தோடர்கள் கடவுளுக்கு நன்றி கூறிய பின் இவர்களின் பாரம்பரிய ஆடல் பாடலுடன் கோவில் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...