தூய்மை தொழிலாளர் சார்பாக தேசிய தூய்மை தொழிலாளர் ஆணையத்திடம் மனு

கோவை: சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணியிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.


கோவை: சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணியிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு, டெல்லியிலிருந்து வந்திருந்த தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு), மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர் நலச் சங்கங்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர்களின் நலன் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குதல், குடியிருப்புகள் ஒதுக்குதல், தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், உயிருக்கு ஆபத்தான துப்புரவு பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவதைத் தடை செய்தல் சட்டம் 2013-ன் படி, மத்திய அரசு சார்பாக 3000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. 

ஆனால், அவை தூய்மை பணியாளர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. மலக்குழி மரணங்கள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. முறையான விளம்பரம் செய்யாமல், தூய்மை பணியாளர் கணக்கெடுப்பு பணியை செய்து முடித்து, கோவை மாநகரில் மிகக் குறைந்த அளவில் தூய்மை தொழிலாளர்கள் பணிபுரிவதாக மாநகராட்சி நிர்வாகத்தால் கணக்கு காட்டப்பட்டுள்ளது. 

இவை அனைத்தையும் தேசிய தூய்மை தொழிலாளர் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் உறுதியளித்துள்ளார்." என்றார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...