சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம்

கோவை: கோவையில் 859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் 859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது. 



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 859 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு நன்கொடை ரூ. 1 லட்சம், ஆசிரியர் பணிக்கு ரூ. 3 லட்சம், பொறியியல் படிக்க ரூ. 50 லட்சம் என்ற பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், மருத்துவர், பட்டதாரி ஆடை அணிந்து மணி அடித்து நூதன முறையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அரசுப் பள்ளிகளை மூட கூடாது, தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கத்தினர் பேசுகையில், "859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசு, 800 டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி தராமல் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது," இவ்வாறு அவர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...