பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் ஆட்சியர்: மாவட்ட அளவில் கோவைக்கு 3-வது இடம்

கோவை: தமிழகம் முழுவதும் இன்று வெளியாகிய பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கோவை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.


கோவை: தமிழகம் முழுவதும் இன்று வெளியாகிய பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கோவை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று வெளியிட்டார். பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் முதல்முறையாக 11-ம் வகுப்பிற்கு நடைபெற்ற பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் மாநிலஅளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் 35,085 மாணவ, மாணவிகள் தேர்வுகள் எழுதினர். இதில் 14,521 மாணவர்களும், 19,226 மாணவிகளும் என மொத்தம் 3,3747 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 111 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 103 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டத்தில் அனைத்து மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.2 சதவீதமாகும். மேலும், தேர்வில் ஏதேனும் பாடப்பிரிவுகளில் தவறிய மாணவர்களும், கல்லூரியைப் போல தாங்கள் 12-ம் வகுப்பிற்கு செல்லுவதற்கு ஏதுவாக உடனடித் தனித்தேர்வின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் 88.61% தேர்ச்சி.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பள்ளிகளின் அடிப்படையில் பிளஸ் -1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.80 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. எஞ்சிய பள்ளிகளின் விபரம் பின்வருமாறு :-

1. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் - 98.80 சதவீதம் தேர்ச்சி

2. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி - 97.37 சதவீதம் தேர்ச்சி

3. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,ஆர்.எஸ்.புரம் (மேற்கு) - 97.24 சதவீதம் தேர்ச்சி

4. மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 96.74 சதவீதம் தேர்ச்சி

5. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரத்தினபுரி - 96.49 சதவீதம் தேர்ச்சி

6. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் - 92.52 சதவீதம் தேர்ச்சி

7. மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதூர் - 88.64 சதவீதம் தேர்ச்சி

8. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடகோவை - 88.46 சதவீதம் தேர்ச்சி

9. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர் காலனி - 85.71 சதவீதம் தேர்ச்சி

10. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு - 79.75 சதவீதம் தேர்ச்சி

11. மாநகராட்சி பா. கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி - 77.88 சதவீதம் தேர்ச்சி

12. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் - 77.88 சதவீதம் தேர்ச்சி

13. மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் - 71.67 சதவீதம் தேர்ச்சி

14. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உடையாம்பாளையம் - 71.64 சதவீதம் தேர்ச்சி

15. மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி - 71.07 சதவீதம் தேர்ச்சி

16. நகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ். புரம் - 65.75 சதவீதம் தேர்ச்சி

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 639

தேர்வு எழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை: 1,337

தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் எண்ணிக்கை: 1,976

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 477

தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் எண்ணிக்கை: 1,274

தேர்ச்சி பெற்ற மாண, மாணவியரின் எண்ணிக்கை: 1,753

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்: 74.64

மாணவிகளின் தேர்ச்சி சதவீதம்: 95.28

மொத்த தேர்ச்சி சதவீதம்: 88.61

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...